கணவனின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கடும் சண்டை.. அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம்
விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது கணவனின் கள்ளத் தொடர்பை கண்டுபிடித்த மனைவி கோபத்தில் விமானத்தை பாதியில் நிறுத்தினார்.
Recommended Video

சென்னை: நேற்று கத்தாரின் தோஹாவில் இருந்து இந்தோனேஷியா சென்று கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானம் கணவன் மனைவி சண்டையால் பாதியில் தரை இறக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று இந்தோனீசியா செல்லும் வழியில் பாதியில் சென்னையில் தரையிறக்கப்பட்டது இருக்கிறது.
அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தன் கணவனின் கள்ளத் தொடர்பை கண்டுபிடித்து இருக்கிறார். இதன் காரணமாக விமான அதிகாரிகளுடன் சண்டை போட்டு விமானத்தை பாதி வழியில் நிறுத்தி இருக்கிறார்.
மேலும் அவர் மிகவும் அதிக அளவில் போதையில் இருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

கத்தார் விமானம்
நேற்று கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று தோஹாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த ஒரு பெண்மணி தன்னுடைய கணவன் தூங்கியதும் சாதாரணமாக அவரது போனை எடுத்து பார்த்து இருக்கிறார். அவரது போனின் லாக்கை ஓப்பன் செய்து பார்த்தவர் தன கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கண்டு அதிர்ந்தார். அவர் பல காலமாக நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்து இருக்கிறார்.

சண்டை போட்ட மனைவி
இந்த நிலையில் அதை பார்த்ததும் அதிர்ந்த அந்த பெண் உடனடியாக கணவனை எழுப்பி அவருடன் சண்டை போட்டு இருக்கிறார். அவர்கள் சண்டையின் காரணமாக அந்த விமானத்தில் இருந்த அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்து இருக்கின்றனர். மேலும் அந்த பெண் குடி போதையில் வேறு அப்போது இருந்து இருக்கிறார்.

அதிகாரிகளுடன் சண்டை
அந்த சண்டையை தடுக்க வந்த விமான பணியாளர்களையும் அவர் திட்டி இருக்கிறார். இதனால் அங்கு பெரிய குழப்பம் உருவாகி இருக்கிறது. இதையடுத்து அவர் விமானத்தை உடனே தரை இறக்கவும் கூறி இருக்கிறார். அவர் பயணிகளுக்கு மிகவும் தொந்தரவாக இருக்கிறார் என்பதால் விமானத்தை தரை இறக்கும் முடிவை விமானிகள் எடுத்தனர்.

சென்னை கொண்டு வரப்பட்டது
இதையடுத்து அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணுடன் சேர்த்து அவரது கணவரும் தரையிறக்கப்பட்டார். அவர்கள் மீது எந்த விதமான வழக்கும் பதியபபடவில்லை. மேலும் அவர்களின் பெயரை வெளியிட விமான அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு.. பெங்களூர், மும்பை பயணிகளுக்கு அதிர்ச்சி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications