தமிழக மக்கள் அடுத்த 6 நாட்களுக்கு ஸ்வெட்டரோடுதான் சுத்தனும்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பலத்த காற்றுடன் மழை- வானிலை மையம் தகவல்- வீடியோ
சென்னை: அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விடவும் குளிர் அதிக அளவில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்கழி மாதம் நிறைவடைய உள்ள நிலையில் குளிர் இப்போது அதிகரித்தபடி உள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் லேசான காற்று அழுத்த பகுதி உருவாகியுள்ளதால், இன்னும் 2 நாட்களில் மணிக்கு 40 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும். கிழக்கு திசையில் வீசும் காற்று ஈரபதத்துடன் உள்ளது. எனவே, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட குளிர் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குழித்துறையில் 2 செ.மீ., மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications