திருங்குறுங்குடி நம்பி மலைக்கோயிலுக்கு செல்ல மீண்டும் தடை… பக்தர்கள் போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள திருங்குறுங்குடி நம்பி கோயிலுக்குள் செல்லவும் இரவில் தங்கவும் வனத்துறையினர் கெடுபிடி செய்து வருகின்றனர். இதனால் அதிருப்தியில் உள்ள பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு
திருநெல்வேலி: மலைக் கோயிலான திருங்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதிப்பதால் அவர்களை கண்டித்து போராட பக்தர்கள் முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் திருங்குறுங்குடி நம்பி கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 11ம் தேதி கோயிலுக்கு வந்த பக்தர்களை இரவில் கோயிலில் தங்க கூடாது என வனத்துறையினர் கட்டாயப்படுத்தி பக்தர்களை வெளியேற்றினர். இதனால் கோயில் நடைகள் சாத்தப்பட்டு வழிபாடுகள், அன்னதானம் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக நாங்குநேரி தாசில்தார் ஆதி நாராயணன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. பக்தர்களை கெடுபிடி செய்ய கூடாது, இரவில் தங்க அனுமதிக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால், வனத்துறை அதிகாரிகள் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தீர்மான நகலில் வனத்துறையினர் கையெழுத்திடாமல் சென்று விட்டதாக குறிப்பெழுதி தாசில்தார் கையெழுத்திட்டு சென்று விட்டார்.
இந்நிலையில், மாலையும் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அவர்களிடம் வனத்துறையினர் மீண்டும் கெடுபிடி செய்தனர். வாகனங்களை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தினர். நடந்து சென்றவர்களின் முகவரியை வனத்துறையினர் நோட்டில் பதிவு செய்தனர். திரும்பி வரும்போது நோட்டில் பக்தர்களிடமிருந்து கையெழுத்து பெற்றனர். கையெழுத்து போட மறுத்தால் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று வனத்துறையினர் கெடுபிடி செய்தனர்.
வனத்துறை அதிகாரிகளின் இந்தக் கெடுபிடியை கண்டித்து வரும் 1ம் தேதி நம்பி கோயிலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த பக்தர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications