தேனியில் ஒரு வாரமாக எரிந்த காடு.. கண்டுகொள்ளாத அரசு.. 9 பேர் உயிரை பறித்த காட்டு தீ
தேனியில் நேற்று மட்டும் இல்லாமல் கடந்த ஒருவாரமாக காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

தேனி: தேனியில் நேற்று மட்டும் இல்லாமல் கடந்த ஒருவாரமாக காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான பகுதியில் இந்த தீ பரவி இருக்கிறது.
தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.
இந்தவிபத்தில் இது வரை 8 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

8 நாட்கள்
இந்த தீ ஏற்பட்டு 8 நாட்களுக்கும் அதிகமாகிறது. முக்கால்வாசி காட்டுப்பகுதியில் இந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவி இருக்கிறது. என்ன காரணத்தினால் இந்த தீ ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை.

எங்கே
குரங்கணி பகுதியில் மட்டுமே தீ ஏற்பட்டது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தேவராம் பொட்டிபுரம் மலைப்பகுதிகளிலும் தீ ஏற்பட்டு இருக்கிறது. சுமார் 30 கிமீ காட்டுப்பகுதியில் இந்த தீ ஏற்பட்டு இருக்கிறது.

அணைக்கவில்லை
இந்த தீயை அணைக்க வனத்துறை பல முயற்சிகள் எடுத்துள்ளது. ஆனால் எந்த விதமான முயற்சிகளும் பயனளிக்கவில்லை. 8 நாட்களாக தீ அணைக்கப்படாத காரணத்தால் தொடர்ந்து பரவிக் கொண்டே இருந்துள்ளது.

பிரச்சனை
இந்த பிரச்சனையே இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு காரணமாக மாறியுள்ளது. இவ்வளவு மோசமாக இருக்கும் காட்டுப்பகுதிக்கு அந்த மாணவிகளும், பொதுமக்களும் யாருடைய அனுமதியும் இல்லாமல் முறைகேடாக சென்று இருக்கிறார்கள். இதுவும் மரணத்திற்கு காரணமாகி இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications