டிடிவி தினகரன் தேர்தலில் இனி போட்டியிடக் கூடாது... தகுதி நீக்கம் செய்ய ஜி ராமகிருஷ்ணன் வேண்டுகோள்
ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் நடைபெற இருந்த இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. மேலும் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது.
இந்தச் சோதனை தொடர்பான அறிக்கையை வருமான வரித்துறை நேற்று சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது. இந்த அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக திடீரென நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜி. ராமகிருஷ்ணன் கூறும் போது, ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை. அதனால்தான் தேர்தல் ரத்து என்ற முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்று கூறினார்.
அதே நேரத்தில் எந்த வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்தார் என்று ஆதாரம் கிடைத்ததோ அதன் அடிப்படையில் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும், ஆர்.கே. நகரில் அடுத்து அறிவிக்கப்படும் இடைத்தேர்தலில் அந்த நபர் கண்டிப்பாக போட்டியிடக் கூடாது என்றும் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications