பாம்பாறு ஓடைகளிலும் 100 தடுப்பணைகள் கட்டினால் தமிழக விவசாயம் என்னாவது? - ஜி.கே.வாசன்
சென்னை: குப்பம் வனப்பகுதியிலிருந்து வரும் பாம்பாறு ஓடைகளின் குறுக்கே 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டி, தமிழகத்துக்கான தண்ணீர் வரத்தை ஆந்திரம் தடுத்துள்ளதற்கு என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆந்திரத்தின் குப்பம் வனப்பகுதியில் இருந்து, பாம்பாறு ஓடைகள் மூலம் தமிழகத்துக்குத் தண்ணீர் வருகிறது. பாம்பாறு மூலம் கிடைக்கும் தண்ணீர் பர்கூர் அருகே 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஓதிக்குப்பம் ஏரியைச் சென்றடையும்.
அதன்பின், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஏரிகள் வழியாக 40 கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணீர் பாய்ந்து ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு வந்து சேரும். இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் விவசாயம் செழிப்புடன் நடைபெற்றது.
ஆனால், நாளடைவில் ஓதிக்குப்பம் முதல் பாம்பாறு அணை வரை உள்ள ஆற்றுப் பகுதியானது கழிவு நீர் ஓடையாக மாறி, அணைக்குப் போதிய நீர்வரத்தும் இல்லாமல் போனது. நிலத்தடி நீர் அளவும் குறைந்து விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.
ஆந்திரத்தின் குப்பம் வனப்பகுதியில் உருவான நீரோடைகளின் குறுக்கே ஆந்திர அரசு கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான சிறு தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்துக்கு தண்ணீர் வரத்தினைக் குறைத்துவிட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டியதால் ஓதிக்குப்பம் ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கப்பட்டுவிட்டது. இதனால் பாம்பாறு வறண்டுவிட்டது.
எனவே, ஓதிக்குப்பம் ஏரிக்கு கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பகுதி விவசாயம் பாதிக்கப்படாமல் விவசாயிகளின் நலன் காக்கப்படும்," என்று அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications