பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் மரபு மீறி செயல்படுகிறார்.. திருமாவளவன் பரபர குற்றச்சாட்டு
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மரபு மீறி செயல்படுகிறார் என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மரபு மீறி செயல்படுகிறார் என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ அண்மையில் வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்த வேண்டிய பேராசிரியையே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிர்மலாவிடம் விசாரணை
நிர்மலா தேவியை கண்டித்து பெற்றோர்கள் மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் நிர்மலா தேவி குறித்து விசாரிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ்
ஆனால் மதுரை காமராசர் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அவசரமாக குழு அமைப்பு
இதையடுத்து பல்கலைக்கழகத்தின் 5 பேர் கொண்ட குழு வாபஸ் பெறப்பட்டது. நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் அவசரமாக குழு அமைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநர் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் இதுகுறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மரபு மீறி ஆளுநர் செயல்படுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

பெண் நீதிபதி
எச். ராஜா பேசுவது குறித்து வேடிக்கை பார்க்காமல் அவரை உடனே அரசு கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பேராசிரியை விவகாரத்தில் பெண் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications