For Daily Alerts
Just In
கிரிஜா வைத்தியநாதன் தலைமை செயலாளராக மீண்டும் பொறுப்பேற்பு!
கிரிஜா வைத்தியநாதன் தமிழக தலைமை செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை: கிரிஜா வைத்தியநாதன் தமிழக தலைமை செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் கிரிஜா வைத்தியநாதன். இந்நிலையில் அண்மையில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். பின்னர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து அவரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் கிரிஜா வைத்தியநாதன் விடுப்பில் சென்றதால் நிதித்துறை செயலர் சண்முகம் தலைமைச் செயலாளர் பொறுப்பை வகித்தார்.
இந்நிலையில் முழுகுணமடைந்த கிரிஜா வைத்தியநாதன் மீண்டும் தலைமை செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
Comments
English summary
Grija Vaithiyanathan again taken charge as Chief secretary of Tamil Nadu govt. She was on leave for leg injurie.
Story first published: Thursday, January 11, 2018, 10:56 [IST]