வறட்சியின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய திண்டுக்கல் பகுதியில் 2-வது நாளாக மழை- மக்கள் ஆனந்த கண்ணீர்!
வறட்சியின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய திண்டுக்கல் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை தொடருவது மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
திண்டுக்கல்: உச்சகட்ட வறட்சியின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் நல்ல மழை பெய்து வருவது திண்டுக்கல் மாவட்ட மக்களை ஆனந்த கண்ணீர் விட வைத்துள்ளது.
தமிழகத்தின் மிகவும் வறட்சி பாதித்த மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்று. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மழை எட்டியே பார்க்காமல் போனது.

வறட்சியின் உச்சம்
இதனால் ஒட்டுமொத்தமாக விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. தென்னை மரங்கள் காய்ந்து கருகிப் போயின. மரங்களும் வயல்வெளிகளும் இல்லாமல் போனதால் அனைத்தும் பொட்டல்காடுகளாகிப் போகின. விளைநிலங்கள் வெடிப்பு கண்டன.

எட்டிப்பார்த்த கனமழை
இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லை எட்டிப்பார்த்தது கனமழை. சுமார் 2 மணிநேரம் இடி மின்னல் இல்லாமல் அமைதியாக கொட்டிய இந்த மழை மக்களை ஆனந்த கண்ணீர் விடவைத்தது.

சமூக வலைதளங்களில்...
தங்களது பகுதியில் மழை பெய்வதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர் திண்டுக்கல் மாவட்ட மக்கள். மழைகாட்சிகளை லைவ்வாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்தும் மகிழ்ந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி
வெளிநாடுகளில் இருப்போரும்கூட உறவினர்களை தொலைபேசியில் அழைத்து நம்ம ஊரில் மழை பெய்ததாமே என மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இன்றும் 2-வது நாளாக இரவு 7 மணி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ந்து போயுள்ளனர். இப்படியே தொடர்ச்சியாக மழை பெய்தால் சற்றே நிலத்தடி நீர் உயர்ந்து பொய்த்து போன விவசாயம் உயிர்பெற்றுவிடும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் விவசாயிகள்.
-
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
பயிர் கடன் ரத்துக்கு வரவேற்பு.. முதல்வர் விஜய்க்கு முக்கிய கோரிக்கை வைத்த ராமதாஸ் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications