தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கன மழை
தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்தவகையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒருமாத காலமாக மழை பெய்து வருகிறது.

தொடரும் கனமழையால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணையில் 7.8 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 22.0 மி.மீ, திருவையாறு 20.4 மி.மீ, தஞ்சாவூர் 15.4 மி.மீ, அய்யம் பேட்டை 28.0 மி.மீ, பாபநாசம் 32.0மி.மீ, கும்பகோணம் 27.0.மி.மீ, கீழணை அணைக்கரை 43.0 மி.மீ, நெய்வாசல் தென்பாதி 20.8மி.மீ, பூதலூர்5.4 மி.மீ, வெட்டிக்காடு 16.0 மி.மீ, ஈச்சன் விடுதி 2.0 மி.மீ ஒரத்தநாடு 12.8மி.மீ, பட்டுக்கோட்டை 10.0 மி.மீ, மதுக்கூர் 15.0மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் 30.2 மி.மீ, குடவாசல் 72.8 மி.மீ, நீடாமங்கலம் 30.0 மி.மீ, நன்னிலம்35.3 மி.மீ, திருவாரூர் 62.4மி.மீ, முத்துப்பேட்டை 9.6மி.மீ, திருத்துறைப்பூண்டி 13.0 மி.மீ, மன்னார்குடி 42.0 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை 75.8மி.மீ, மஞ்சளாறு 35.6மி.மீ, மணல்மேடு 14.4மி.மீ, கொள்ளிடம் 24.0 மி.மீ, சீர்காழி 14.6 மி.மீ, பொறையாறு 42.0 மி.மீ, கொரையாறு 32.4மி.மீ, பாண்டவையாறு 41.4 மி.மீ, முல்லையாறு 69.6 மி.மீ, நாகப்பட்டினம் 63.0 மி.மீ, தலைஞாயிறு31.6 மி.மீ, திருப்பூண்டி 37.6மி.மீ, வேதாரண்யம் 21.4 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரை பகுதியில் 43.0 மி.மீ மழையும் குறைந்தபட்சமாக ஈச்சன் விடுதியில் 2.0மீ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக குடவாசல் பகுதியில் 72.8 மி.மீட்டர் மழைபெய்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்ச மாக மயிலாடுதுறையில் 75.8மி.மீ மழையும் குறைந்த பட்சமாக மணல்மேடு பகுதியில் 14.4மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
கனமழையின் எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்திருப்பதால், இன்று காலையில் கல்லணையில் இருந்து வெண்ணாற்றுக்கு வினாடிக்கு 4ஆயிரம் கனஅடி தண்ணீரும், கல்லணை கால்வாய் புது ஆற்றுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 4 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 7 ஆயிரத்து 4 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், தற்காலிகமாக கல்லணையில் இருந்து காவிரி ஆறு, கொள்ளிடம் ஆறு, கோவிலடி சேனல் மற்றும் பிள்ளை வாய்க்கால் ஆகியவற்றுக்கு சென்று கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications