மவுலிவாக்கம் கட்டிட விபத்து அறிக்கை தாக்கல் எப்போது?- தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
சென்னை: மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான அறிக்கை சட்டமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு வரும் 23ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 60 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்திற்கு அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விபத்து வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி கமிஷன் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ததாகவும், விரைவில் அந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "இதுவரை நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் விபத்து குறித்த அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை. கடந்த அக்டோபர் 2014ல் இருந்து இதுவரை 5 முறை சட்டமன்றம் கூடியிருக்கின்றது.
ஆனால் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்கப் போரீர்களா இல்லையா. அறிக்கையை வைப்பதாக இருந்தால் எப்போது வைக்கப் போகிறீர்கள். எப்போது சட்டமன்றம் நடைபெற உள்ளது அதற்கான தேதிகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?











Click it and Unblock the Notifications