மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய நோட்டீஸ்... நாளை காலை வரை கெடு
மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீவிபத்தை அடுத்து அங்குள்ள 115 கடைகளையும் காலி செய்ய கோரி தமிழக அரசு நோட்டீஸ் அளித்துள்ளது.
மதுரை: தூங்காநகரமான மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடந்த வாரம் தீவிபத்து நடைபெற்றதை அடுத்து அங்குள்ள 115 கடைகளையும் காலி செய்ய கோரி கோயில் இணை ஆணையர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடந்த வாரம் ஒரு கடையில் தீவிபத்து நடைபெற்றது. இந்த தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது. இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் நாசமாகின.

கிழக்கு கோபுரம் அருகே வீர வசந்த மண்டபம் அருகே நடைபெற்ற இந்த தீவிபத்தில் அங்கு மாடத்தில் இருந்த புறாக்கள் கருகின. இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோயில் வளாகத்தில் இரவு கடையை மூடும் போது ஒருவர் கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெரிந்தது. இந்நிலையில் அந்த கடை உரிமையாளர் முருகபாண்டியை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் நாளை காலைக்குள் காலி செய்ய கோயில் இணை ஆணையர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் மீனாட்சி அம்மன் கோயில் வளாக கடை உரிமையாளர்கள் நல சங்க தலைவர் ராஜநாகலு, மாற்று இடம் கொடுத்த பின்னர் கடைகளை காலி செய்ய சொல்ல வேண்டும். இந்த நோட்டீஸால் 500 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும். கோயிலில் மாற்று மதத்தினர் யாரும் கடை வைத்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications