நிரந்தரமாக விடுதலை ஆகி வருவார் பேரறிவாளன்.. தாய் அற்புதம்மாள் கண்ணீர்
ஜோலார்பேட்டை: பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆகி வருவார். அந்த நம்பிக்கை உள்ளது என்று அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோல் கிடைத்துள்ளது. இதையடுத்து இன்று மாலை அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சொந்த ஊரான வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு அவர் திரும்பியுள்ளார்.

முன்னதாக இதுகுறித்து அற்புதம் அம்மாள் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், வீட்டு வாசலில் காலடி வைக்கும் வரை இந்த தகவலை நம்ப முடியாது. ஏனெனில் ஏற்கனவே ஒருமுறை பேரறிவாளனை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அவர் விடுதலை செய்யப்படவில்லை. இப்போது பரோலில் வெளியிடுவது குறித்த தகவலையும் எப்படி நம்புவது என்று தெரியவில்லை.
நீண்டகாலமாக பேரறிவாளனை வெளியே கொண்டுவர முயன்று வருகிறேன். எனது மகன் வாழ்க்கை காலமெல்லாம் சிறையிலேயே கழிந்துவிட்டது. எனவேதான் நான் விரக்தியில் நம்ப முடியாமல் பேசுகிறேன். என்னை யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். ஒருவேளை, இத்தகவல் உண்மையெனில், பரோலில் வெளியேவர ஏற்பாடு செய்த அனைவருக்குமே நன்றி கூறிக்கொள்கிறேன். இவ்வாறு கூறிய அற்புதம்மாள், தேம்பி அழ ஆரம்பித்தார்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில், பேரறிவாளனை விடுதலை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் பேரறிவாளன் மத்திய அரசு விசாரணை அமைப்பால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி என்பதால் இந்த தீர்மானத்தை வைத்து அவரை விடுதலை செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது மகன் வீடு திரும்புவது குறித்து அற்புதம் அம்மாள் இன்று இரவு செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது மகனுக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. பேரறிவாளன் நிரந்தரமாக வீடு திரும்பி வருவார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications