நான் கட்டுறேன் எங்க அத்தை ஜெ.வோட 100 கோடி அபராதத்தை.. தீபக் அதிரடி!
ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் திடீரென சசிகலா தரப்புக்கு எதிராக பேசியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா செலுத்த வேண்டிய அபராதம் 100 கோடி ரூபாயை தானே செலுத்துவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கூறியுள்ளார். மேலும் டிடிவி தினகரனை அதிமுக தலைமையாக ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவின் போது சசிகலா தரப்பால் அணைத்துக்கொள்ளப்பட்டவர் அவரது அண்ணன் மகனான தீபக். ஜெயலலிதாவுக்கு குடும்பத்தினர் என்ற முறையில் இறுதிச்சடங்கு செய்யவும் சசிகலா குடும்பம் அவருக்கு அனுமதி வழங்கியது.

அன்று முதல் சசிகலா அத்தை என்று வாயார கூறி வந்தார். தீபா சசிகலா குடும்பத்தை எதிர்த்தப் போதும் கூட தீபக் அவர்களுக்கு ஆதரவாகவே இருந்துவந்தார். கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்தது.
அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபயும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு சிறையில் கடந்த 16ஆம் தேதி அடைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் பெங்களூரு சிறைக்கு டிடிவி தினகரனுடன் சென்ற தீபக் சசிகலாவை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்தியோக பேட்டியளித்தார். அப்போது தனது அத்தை ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை கடன் வாங்கியாவது கட்டுவேன் என தெரிவித்துள்ளார்.
சகோதரி தீபாவுக்கும் தனக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர், அதிமுகவின் தலைமையா டிடிவி தினகரனை ஏற்க முடியாது என்றார். ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவுக்கு வரவேண்டும் என்றும் அவர் தீபக் கூறினார்.
இதுவரை சசிகலா தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த தீபக் இன்று திடீரென டிடிவி தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications