நான் கட்டுறேன் எங்க அத்தை ஜெ.வோட 100 கோடி அபராதத்தை.. தீபக் அதிரடி!
ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் திடீரென சசிகலா தரப்புக்கு எதிராக பேசியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா செலுத்த வேண்டிய அபராதம் 100 கோடி ரூபாயை தானே செலுத்துவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கூறியுள்ளார். மேலும் டிடிவி தினகரனை அதிமுக தலைமையாக ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவின் போது சசிகலா தரப்பால் அணைத்துக்கொள்ளப்பட்டவர் அவரது அண்ணன் மகனான தீபக். ஜெயலலிதாவுக்கு குடும்பத்தினர் என்ற முறையில் இறுதிச்சடங்கு செய்யவும் சசிகலா குடும்பம் அவருக்கு அனுமதி வழங்கியது.

அன்று முதல் சசிகலா அத்தை என்று வாயார கூறி வந்தார். தீபா சசிகலா குடும்பத்தை எதிர்த்தப் போதும் கூட தீபக் அவர்களுக்கு ஆதரவாகவே இருந்துவந்தார். கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்தது.
அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபயும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு சிறையில் கடந்த 16ஆம் தேதி அடைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் பெங்களூரு சிறைக்கு டிடிவி தினகரனுடன் சென்ற தீபக் சசிகலாவை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்தியோக பேட்டியளித்தார். அப்போது தனது அத்தை ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை கடன் வாங்கியாவது கட்டுவேன் என தெரிவித்துள்ளார்.
சகோதரி தீபாவுக்கும் தனக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர், அதிமுகவின் தலைமையா டிடிவி தினகரனை ஏற்க முடியாது என்றார். ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவுக்கு வரவேண்டும் என்றும் அவர் தீபக் கூறினார்.
இதுவரை சசிகலா தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த தீபக் இன்று திடீரென டிடிவி தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications