5 பேரை பலிவாங்கிய சோமனூர் பேருத்து நிலைய விபத்து... நேரில் ஆய்வு செய்தார் ககன்தீப்சிங்பேடி!
கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்திய இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை: சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து நடைபெற்ற இடத்தை விசாரணை அதிகாரி ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை அருகே சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை கடந்த செப்டம்பர் 7ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 20 வயது கல்லூரி மாணவி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். பேருந்து நிலைய கட்டிடம் சேதமடைந்தது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே விபத்திற்கு காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விபத்து குறித்து விசாரித்த அறிக்கை அளிக்க அரசுஉத்தரவிட்டுள்ளது. இதன்படி ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் முறைப்படி நேற்று விசாரணையைத் தொடங்கினார். இன்று சோமனூரில் விபத்து நடந்த இடத்தில் அவர் ஆய்வு செய்தார்.
அப்போது அந்தப் பகுதியில் சுற்றி கடை வைத்திருக்கும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம், பேருந்து நிலையம் எப்போது கட்டப்பட்டது, கட்டிடம் சீரமைக்கப்பட்டதா இல்லையா உள்ளிட்டவை குறித்து கருத்துகளை கேட்டறிந்தார்.
மேலும் இந்த கட்டிடம் சிதிலமடைந்திருப்பது குறித்து எப்போது புகார் அளிக்கப்பட்டது, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அதிகாரிகளிடம் ககன்தீப் சிங் கேட்டறிந்தார். விபத்து குறித்து முழு விசாரணை முடிந்தது 2 மாதத்திற்குள் அரசிடம் ககன்தீப்சிங் பேடி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications