For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட சென்னையில் 1 லட்சம் போர்வைகள், உணவுப் பொட்டலங்கள் வழங்கிய இளையராஜா!

By Shankar
Google Oneindia Tamil News

வட சென்னைப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் போர்வைகள் மற்றும் உணவுப் பொருட்களை தானே நேரில் சென்று வழங்கினார் இசைஞானி இளையராஜா.

சென்னை நகரை பெருமழை வெள்ளம் தாக்கிய நாளிலிருந்து தன் வயதையும் மீறி வெள்ளத்தில் நடந்து சென்றும், படகில் பயணித்தும் மக்களுக்கு அத்யாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார் இளையராஜா.

Ilaiyaraaja help 1 lakh blankets to North Chennai flood affected people

சில தினங்களுக்கு முன்பு வெள்ளம் பாதித்த சிறுமலர் பள்ளியில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு படகில் சென்று உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார் இளையராஜா.

மேலும் தி நகரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கும் உணவு வழங்கினார்.

Ilaiyaraaja help 1 lakh blankets to North Chennai flood affected people

நேற்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட சென்னைப் பகுதிக்கு பயணம் செய்தார் இளையராஜா. அங்கு ஒரு லட்சம் போர்வைகள் மற்றும் உணவுப் பொட்டலங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். பல்வேறு பகுதிகளையும் மக்களையும் நேரில் பார்த்து இந்த உதவியை இளையராஜா வழங்கினார்.

English summary
Maestro Ilaiyaraaja has helped with 1 lakh blankets and food to flood affected North Chennai people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X