பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து.. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?
பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்று சந்தேகம் எழுந்து இருக்கிறது.
ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 6 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த நிலையில் தற்போது பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும் என கூறப்பட்ட நிலையில் விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
பொங்கல் சிறப்பு பேருந்துகள் கூட்ட நெரிசலை சமாளிக்க உதவும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களுக்கு வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது. மேலும் இந்த முறை பொங்கலுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுவதே சிக்கலாகி இருக்கிறது. இந்த வெள்ளிக் கிழமையுடன் பொங்கல் விடுமுறைகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.