தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தவில்லையாம்.. விளக்கத்தை பாருங்க
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என இந்திய பாதுகாப்பு படை பிரிவு சார்பில் விளக்கம் அளித்து இருக்கிறது.
சென்னை: தமிழக மீனவர்கள் மீது கடலோர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தவில்லை என இந்திய பாதுகாப்பு படை பிரிவு விளக்கம் அளித்து இருக்கிறது. மேலும் மீனவர்கள் தவறான தகவலையளித்து மக்களை திசை திருப்புகிறார்கள் எனவும் அறிக்கையொன்றில் குற்றம்சாட்டி இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்பட்டது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டின் போது மீனவர்களை ஹிந்தியில் பேசும் படி அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியானது.

இந்த சூட்டில் ராமேஸ்வரத்தை சேர்ந்த பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன் என்ற மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மீனவர்களை கடலோர காவல் படையினர் மிகவும் துன்புறுத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த புகாருக்கு இந்திய பாதுகாப்பு படை பிரிவு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதில் ''நாங்கள் கடலில் சோதனை செய்த போது தமிழ்நாட்டிற்கு சொந்தம் இல்லாத போட் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த போட்டில் இருந்தவர்கள் நாங்கள் நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றனர். 50 நிமிடம் துரத்திதான் அவர்களை பிடித்தோம். துப்பாக்கி சூடு நடத்தவில்லை. கடலோர காவல்படை ரப்பர் குண்டுகளை பயன்படுத்துவதேயில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ''இந்த சம்பவத்தில் மீனவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை. நாங்கள் சாதாரணமாக சோதனை செய்ததை தவறாக வெளியே பரப்ப முயற்சிக்கிறார்கள். மீனவர்கள் மக்களை திசை திருப்புகிறார்கள்'' என்று அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications