ஹஜ் பயணிகளுக்குச் சலுகை செய்யும் இண்டஸ் இந்த் வங்கி!- ஹஜ் கமிட்டி துணைத் தலைவர்
ஹஜ் பயணிகளுக்கு அதிக சலுகை தரும் வங்கியாக இண்டஸ் இந்த் வங்கி திகழ்வதாக ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் 'இண்டஸ் இந்த் 'வங்கியின் புதிய கிளை திறக்கப் பட்டது. இந்தத் திறப்பு விழாவில் ஹஜ் கமிட்டி இந்தியாவின் துணைத்லைவர் ஏ.அபுபக்கர் கலந்து கொண்டு வங்கிக் கிளையைத் திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இண்டஸ் இந்த் வங்கியின் தெற்கு மண்டலம் 2-ன் தலைவர் எஸ்.டி.கோபால், இண்டஸ் இந்த் வங்கியின் சென்னை மெட்ரோ பிராந்தியத் தலைவர் எல்.ராஜேஷ், டாக்டர் சுஜய் சுப்ரமணியன்,புதிய வங்கியின் கிளை மேலாளர் பழனியப்பன் பிள்ளைஆகியோர் கலந்து கொண்டனர்.
இண்டஸ் இந்த் வங்கியைத் திறந்து வைத்து ஹஜ் கமிட்டி (இந்திய வெளியுறவுத்துறை) துணைத்லைவர் அபுபக்கர் பேசும் போது, "ஹஜ் கமிட்டி ஆப் இந்தியா' வுக்கென்று தனிப்பட்ட சிறப்புகள் உண்டு. இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்கள் அனைவருமே ஏழை எளிய மக்கள்தான், அதிலும் வயது முதியவர்கள் அதாவது அறுபது எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்தான் செல்கிறார்கள்.

ஹஜ்ஜுக்கு 2015ல் பயணம் செல்பவர்களுக்கென்று இண்டஸ் இந்த் வங்கி குறைந்த பட்ச 'எல் ஒன் பிட்' கொடுப்பதற்கு அனுமதி பெற்றுள்ளது. அந்தவகையில் இண்டஸ் இந்த் வங்கியை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.
வங்கிகள் என்றாலே லாப நோக்கில் பணம் சம்பாதிக்கும் குறுகிய நோக்கத்தில் செயல்படும் மனப்பான்மை இருக்கும். ஆனால் இண்டஸ்இந்த் வங்கி சேவை நோக்கிலும் செயல்பட்டு வருகிறது.
2015ல் அரசு உதவியுடன் ஹஜ்ஜுக்கு பயணமாக இப்படிச் சவுதி அரேபியா செல்பவர்கள் 1,15,000 ஆக எதிர்பார்ப்பு இலக்கு இருக்கிறது. தவிர தனியே 30,000 பேர் செல்கிறார்கள்.
இந்தியாவில் ஹஜ் செல்பவர்களுக்கு 26 விமான நிலையங்களில் 1 லட்சத்து 15ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு 400 கோடி ரூபாயை தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை ரியாலாக வழங்க இவ்வங்கி இந்திய அரசின் சட்ட பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த வங்கி இப்படி இந்த சட்டபூர்வ அனுமதியை இரண்டாவது முறையாகப் பெற்றுள்ளது. இதன்படி ஒவ்வொரு பயணிக்கும் அரசு வழங்கியுள்ள அந்த 2000 ரியாலை வழங்கவுள்ளது. இந்த சேவைக்காக இந்த வங்கியை ஹஜ் கமிட்டியும் மத்திய வெளியுறவுத் துறையும் மனமாரப் பாராட்டுகிறது.
இந்த ராயப்பேட்டை பகுதியிலுள்ள சிறு வணிகர்கள், பில்டர்கள், மருத்துவமனைகள், நடுத்தர வர்க்க தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி உதவிட இந்த வங்கியைக் கேட்டுக் கொள்கிறேன். கல்விக் கடன்களையும் வழங்கி உதவிட கேட்டுக் கொள்கிறேன். இந்த வங்கி ராயப்பேட்டை,மயிலாப்பூர். பகுதியில் உள்ள தனியார் வங்கிகளில் முதல் வங்கியாக வளர்ந்து திகழவும் வாழ்த்துகிறேன்,'' என்றார்.
முன்னதாக கிளை மேலாளர் பழனியப்பன் பிள்ளை அனைவரையும் வரவேற்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications