சர்வதேச கள்ளநோட்டு கும்பல் தமிழகத்தில் முகாம்? கானா நாட்டு இளைஞர் கைதால் கன்னியாகுமரியில் அதிர்ச்சி
சர்வதேச கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பல் தமிழகத்தில் முகாமிட்டுள்ளதாக சந்தேகம் அடைந்துள்ள போலீசார் அது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி: சர்வதேச கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த கானா நாட்டு இளைஞர் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் தமிழகத்தில் சர்வதேச கள்ளநோட்டுக் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

தமிழக - கேரள எல்லையில் சர்வதேச கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த கானா நாட்டு இளைஞர் கன்னியாகுமரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமரவிளை சோதனைச் சாவடியில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்றில் சோதனையிட்ட மதுவிலக்கு போலீசார், வெளிநாட்டு இளைஞர் ஒருவரின் உடமைகளை சோதித்தனர். அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும், கள்ள நோட்டுகள் தயாரிப்புக்கான பொருள்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அந்த இளைஞரை கைது செய்து விசாரித்ததில், அந்த நபர் கானா நாட்டைச் சேர்ந்த ரோப் எடிசன் என்று தெரியவந்தது. ஆப்பிரிக்காவின் ரூபாய் நோட்டுகளைப் போன்ற கள்ள நோட்டுகளுடன் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.
சர்வதேச கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த இவருடன் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிக்க, ரோப் எடிசன் கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து கேரளா கொண்டு செல்லப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் சர்வதேச கள்ள நோட்டுக் கும்பல்கள் இந்தியாவில் எங்கெங்கு பதுங்கியுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications