கண் தானத்தை வலியுறுத்தி.. 101 மணி நேரத்தில் 2100 துணிகளுக்கு இஸ்திரி.. சென்னை இளைஞரின் சாதனை முயற்சி
சென்னை: சென்னையை சேர்ந்த டேனியல் சுந்தர் என்ற இளைஞர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக, 101 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 100 துணிகளுக்கு இஸ்திரி செய்யும் பணியை தொடங்கியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் டேனியல் சுந்தர் என்ற இளைஞர். இவர், கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, புதிய சாதனை முயற்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதாவது, 101 மணி நேரத்தில் சுமார் 2100 துணிகளை இஸ்திரி செய்ய வேண்டும் என்பது தான் அவரது இலக்கு.

சென்னையில் உள்ள முக்கிய வணிகவளாகம் ஒன்றில் பொதுமக்கள் பார்வையில் இந்த சாதனை முயற்சி தொடங்கியுள்ளது. சென்னை மேயர் சைதை துரைசாமி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி வரும் 30ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சாதனை முயற்சியை மற்ற இடங்களில் உள்ள மக்களும் பார்க்கும் வகையில் சென்னையில் இரண்டு இடங்களில் எல்.இ.டி திரையில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

இந்த சாதனை முயற்சியின் கூடவே பிரபலங்கள் பங்கேற்று கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். ரத்ததானம், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தனது இந்த முயற்சியின் மூலம் ஐந்து நாட்களில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கண் தானம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக டேனியல் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இங்கிலாந்தை சேர்ந்த கரேத் சாண்டர்ஸ் என்ற இளைஞர் 100 மணி நேரத்தில், இரண்டாயிரம் துணிகளை இஸ்திரி செய்ததே கின்னஸ் சாதனையாக உள்ளது. இந்த சாதனையை டேனியல் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications