ஐஎஸ்எல் கால்பந்து... கேரளாவை வீழ்த்தி 2- வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது
கொச்சி: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெனால்டி ,ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கொச்சி ஜவஹர்லால் நேரு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா- கேரளா அணிகள் மோதின.

மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் அரையிறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. 37-வது நிமிடத்தில் கேரள அணியின் ரபி ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா அணியின் சிரினோ ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து 2-வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தன. ஆனால் இரு அணி வீரர்களின் முயற்சிகளுக்கும் பலன் கிட்டவில்லை. இதனால் இரண்டு முறை தலா 15 நிமிடங்கள் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்திலும் இரு அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் கேரளா அணி 3 கோல்களும், கொல்கத்தா அணி 4 கோல்களும் அடித்தன.

இதன் மூலம் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கடந்த மூன்று வருடங்களில் கொல்கத்தா அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. சொந்த மண்ணில் கேரளா அணி வெற்றியை தவறவிட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications