ஐ.டி. ஊழியர்களும் யூனியன் தொடங்கலாம்: தமிழக அரசு அனுமதி
சென்னை: ஐ.டி ஊழியர்களும் சங்கம் ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.டி., நிறுவனங்களின் தொழிற்சங்கங்களுக்கும் முறைப்படி அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் சுமார் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் ஐ.டி நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு தற்போது வரை தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க தொழிலாளர் சங்கங்கள் இல்லை.

ஐ.டி நிறுவனங்கள் இதற்கு அனுமதிப்பதும் இல்லை. இதனால் தீடீர் ஆட்குறைப்பு, வேலை இழப்பு போன்ற காரணங்களுக்காக ஐ.டி ஊழியர்கள் போராட முடியாத சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முண்ணனி என்ற அமைப்பின் ஐ.டி தொழிலாளர் பிரிவு ,கடந்த வருடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தற்போது பதிலளித்துள்ள தமிழக அரசு, ஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ள எந்தவித தடையும் இல்லை என தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த சேவை நிறுவனங்களுக்கு எல்லா தொழிலாளர் சட்டங்களும் பொருந்தும் எனவும் தொழிலாளர் சட்டப்படி ஐ.டி ஊழியர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications