காரைக்குடியில் 300 காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு!!
காரைக்குடி அருகே 300க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: தென்கரை பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடை இந்த ஆண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை நீக்கக்கோரியும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும் தமிழகம் முழுவமும் போரைட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் காவல்துறையின் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் பேட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காரைக்குடி அருகே தென்கரையில் 300க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். காவல்துறையின் தடையை மீறி இந்த ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதனை ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் கண்டுகளித்தனர்.












Click it and Unblock the Notifications