மருமகளிடம் தவறாக நடந்த மாமனார்... கட்சிப் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா!
சென்னை: சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஜெ. பேரவை பிரமுகர், தனது மருமகளிடமே அத்துமீறி நடந்தது தொடர்பாக சிக்கலில் மாட்டியுள்ளார். அவர் மீது கோர்ட் உத்தரவுக்குப் பிறகு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த நபரை தற்போது அவர் வகித்து வந்த ஜெ. பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் கே.ஜீ.சிங்காரவேலன் என்கிற சிங்காரம். இவர் பல்லாவரம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும், மகன் விவேகானந்தனுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்தது. அத்தோடு, விவேகானந்தனின் மனைவிக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் சிங்காரவேலன்.

சிங்காரவேலனின் இந்த அசிங்கமான செயலுக்கு அவரது மகள் சரண்யா, மருமகன் ரகு ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். அனைவரும் சேர்ந்து விவேகானந்தன் மனைவியை வீட்டை விட்டும் விரட்டியுள்ளனர். கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து விவேகானந்தன் மனைவி பல்லாவரம் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் லோக்கல் போலீஸார் புகாரைக் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து தாம்பரம் கோர்ட்டுக்குப் போனார் விவேகானந்தன் மனைவி. அங்கு வழக்கை விசாரித்த கோர்ட், சிங்கராவேலன், சரண்யா, ரகு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து தற்போது பல்லாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை.
டிஸ்மிஸ்
இந்நிலையில், பல்லாவரம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்த சிங்காரவேலனை நீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், பல்லாவரம் நகர ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஜி.சிங்காரவேலன் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications