சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ12,000 ஆக உயர்வு- ஜெ. அறிவிப்பு
சென்னை: சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ12,000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின சிறப்புரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, உயர்கல்விக்கு தமது தலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
உண்மையான சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரம்தான்... தமிழகத்தில் தொழில்வளர்ச்சி அதிகரித்துள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ11,000-ல் ரூ12,000 ஆக உயர்த்தப்படும்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ5,000-ல் இருந்து ரூ6,000ஆக உயர்த்தப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.