ரத்த வெள்ளத்தில் ஜெ.. அப்பல்லோவுக்கு அனாதை போல அழைத்து சென்ற கொடுமை- பொன்னையன்
ஜெயலலிதா தாக்கப்பட்டு ரத்த காயங்களுடன் அனாதை போல அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டன் பங்களாவில் தாக்கப்பட்டு கன்னத்தில் ரத்தம் வடிந்த நிலையில் அனாதை போல அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் ஒவ்வொருவரும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் சசிகலா அணியோ, ஜெயலலிதாவுக்கு ஒன்றுமே நடக்கவில்லை; அவர் நன்றாகவே மருத்துவமனையில் இருந்தார்; மாரடைப்பு மட்டுமே அவர் மரணத்துக்கு காரணம் என கூறி வருகிறது.
அதே நேரத்தில் ஜெயலலிதா, போயஸ் கார்டன் பங்களாவில் தாக்கப்பட்டார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தொடர்ந்து கூறி வருகிறார். சென்னையில் ஞாயிறன்று ஓபிஎஸ் வீட்டில் தொண்டர்களுடனான ஆலோசனையின் போது பொன்னையன் பேசியதாவது:

பணிப் பெண் எங்கே?
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தாக்கப்பட்டார். அதில் நிலை குலைந்து ஜெயலலிதா கீழே விழுந்தார். இதை நேரில் பார்த்த ஜெயலலிதா வீட்டு பணிப் பெண்ணை காணவில்லை.

கன்னத்தில் ரத்த காயங்கள்
ஜெயலலிதா தாக்கப்பட்டு கன்னத்தில் ரத்த காயங்களுடன் எங்கள் கண்ணில் எல்லாம் மிளகாய்பொடியை தூவிவிட்டு அனாதையைப் போல கொண்டு போய் அப்பல்லோவில் சேர்த்தார்கள். மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், பேசினார் என நாங்கள் சொன்னோம்.

தம்பிதுரை சொன்னதை சொன்னோம்
ஆனால் இப்படி சொல்லுமாறு எங்களுக்கு சொன்னதே தம்பிதுரைதான். அவர் சொன்னதை அப்படியே நாங்கள் மீடியாக்களில் சொன்னோம். இவ்வாறு பொன்னையன் கூறினார்.

செம்மலையும் 'திடுக்'
இதேபோல் எம்.எல்.ஏ. செம்மலையும் போயஸ் கார்டன் பங்களாவில் ஜெயலலிதா தாக்கப்பட்டதால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என குற்றம்சாட்டியுள்ளார். இப்படியான பகீர் தகவல்கள் அதிமுகவினரை மட்டுமல்ல பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications