வருமான வரி வழக்கில் 10ம் தேதி கோர்ட்டில் ஆஐராக ஜெ.வுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யாத வழக்கில் நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆஜராகவில்லை. மேலும் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் நேரில் ஆஜராக விலக்கு கோரி தாக்கல் செய்யபப்பட்ட மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
அவர் ஏப்ரல் 10ம் தேதி கோர்ட்டில் ஆஐராக வேண்டும் என்றும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த உத்தரவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1993-94ம் ஆண்டில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி அறிக்கையை ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தாக்கல் செய்யவில்லை என்பது வழக்கு. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் இன்று ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டபடி ஜெயலலிதா ஆஜராகவில்லை.
இன்றைய வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் நீதிமன்ற விசாரணையில் நேரில் ஆஜராக ஜெயலலிதா விலக்கு அளிக்கக் கோரியிருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்த கோர்ட் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏப்ரல் 10ம் தேதி ஜெயலலிதா கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தற்போது ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்காளர்களிடம் திமுகவை கடுமையாக சாடிப் பேசி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கையும் சுட்டிக் காட்டிப் பேசி வருகிறார். இந்த நிலையில் அவர் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருப்பது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சென்னை கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமனறத்தை அணுகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications