தர்மபுரி இளவரசன் மரணம்… நீதிபதி முன் திவ்யா ஆஜராகி சாட்சியம்
தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் முன் திவ்யா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
தர்மபுரி: தர்மபுரி இளவரசன் மர்மான முறையில் ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடத்தார். இது படுகொலை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
தர்மபுரியை அடுத்த நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.

பெற்றோரிடம் சாட்சியம்
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நீதிபதி சிங்காரவேலு தர்மபுரி சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இளவரசனின் தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.

திவ்யா சாட்சியம்
இளவரசனை காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்து சென்ற திவ்யா நீதிபதி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவருடன் திவ்யாவின் தாயார் தேன்மொழி மற்றும் பாமக என எட்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதுவரை 79 பேரிடம்..
இது தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரமுகர்கள் மற்றும் சிலரிடம் நீதிபதி விசாரணை நடத்தி சாட்சியத்தை பதிவு செய்தார். இதுவரை 79 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

தொடரும் விசாரணை
இந்நிலையில், மீண்டும் ஒருமுறை நீதிபதி சிங்காரவேலு தர்மபுரி வந்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளவரசன், திவ்யா காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் பாமக தலையிட்டு அவர்களை வலுக்கட்டாயமாக பிரித்துச் சென்ற பின்னர் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications