காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு விவசாய சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்பு
சென்னை: 4 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி நீரை திறந்து விடாத கர்நாடகத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த சுப்ரீம் கோர்ட், 4 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளாக தமிழகம் போராடி வருகிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் மத்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே கண்டு கொள்ளவில்லை. இதனால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது.
இப்போது சுப்ரீம் கோர்ட் 4 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இது மத்திய அரசின் தலையில் சுப்ரீம் கோர்ட் வைத்துள்ள குட்டு. இனியாவது காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு முறைப்படியான மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
அதே போன்று கர்நாடக அரசு 6000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட மறுக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு கட்டுப்பட்டு இந்த முறையாவது கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீரை திறந்து விட வேண்டும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications