அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்த வழக்கு.. வாபஸ் பெற்ற கே.சி.பழனிச்சாமி
சசிகலா தரப்பில், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்ததை எதிர்க்கும் மனுவை வாபஸ் பெறுவதாக கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை: சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்ததை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி வாபஸ் பெற்றுக்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: அதிமுகவின் சட்ட விதிகளின்படி, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள கட்சியின் அனைத்து அடிப்படை தொண்டர்களும் சேர்ந்துதான் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய முடியும்.

ஆனால், கட்சியின் பொதுக்குழு கூடி வி.கே.சசிகலாவை, தாற்காலிக பொதுச் செயலாளராக நியமித்தது. அவ்வாறு பொதுக்குழுவால் பொதுச் செயலாளரை நியமிக்க முடியாது. இது, கட்சியின் துணை விதிகளுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானதாகும்.
ஆகையால், கட்சியின் தேர்தலை நடத்த சுதந்திரமான அதிகாரியை நியமிக்க வேண்டும். பொதுச் செயலாளராக சுயமான நியமனம் செய்து கொண்ட எவரும், எந்த முடிவுகள் எடுப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.
இது சம்பந்தமாக, ஜனவரி 20ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆகையால், அதிமுகவின் பொதுச் செயலாளர் பதிவிக்கான தேர்தல் நடத்துவதற்கு தனி அதிகாரி ஒருவரை நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தரப்பில், தாங்கள் ஏற்கனவே இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உட்கட்சி விவகாரத்தை ஏன் நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறீர்கள் என நீதிபதி கடிந்து கொண்டார். தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த மனுவை வாபஸ் பெறுவதாக கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications