கள்ளக்குறிச்சி கலவரம்.. அதிகாரிகள் தூக்கியடிப்பு தொடர்கிறது.. பெண் டிஎஸ்பி டிரான்ஸ்பர்.. அரசு அதிரடி!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி மர்மமரணம் தொடர்பாக தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக பெண் டிஎஸ்பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் எஸ்பி காத்திருப்பு பட்டிலுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் படித்தார்.
விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் இறப்புக்கு நீதிகேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது.

கலவரமான போராட்டம்
கடந்த 17 ம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து பஸ்களை சேதப்படுத்தினர். 3,000 மாணவர்களின் டி.சி உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து தீக்கிரை ஆகின. மேலும் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தினர். கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக 200-க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் -எஸ்பி மாற்றம்
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி கலெக்டராக இருந்த ஸ்ரீதர், சென்னை கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவதி நியமனம் செய்யபட்டார். மேலும் கள்ளக்குறிச்சி எஸ்பி செல்வக்குமார் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக பகலவன் நியமிக்கப்பட்டார்.

இன்னொரு அதிகாரி மாற்றம்
இதன் தொடர்ச்சியாக தற்போது கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக இருந்த ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய டிஎஸ்பியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

உளவுத்துறையிலும் மாற்றம்
முன்னதாக இந்த விஷயத்தில் உளவுத்துறை தோல்வியடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள், அமலாக்கத்துறை ஐஜியாக மாற்றப்பட்டார். உளவுத்துறையின் புதிய ஐஜியாக செந்தில்வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications