கள்ளக்குறிச்சி கலவரத்தில் வதந்தி.. ஒருவரையும் விடமாட்டோம்.. டுவிட்டருக்கு கடிதம் எழுதிய போலீசார்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமரணம் விவகாரத்தில் நடந்த கலவரம் தொடர்பாக போலீஸ் துறை சார்பில் டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி படித்தார்.
இந்த மாணவி மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக பள்ளி நிர்வாகம் கூறியது. இதனை குடும்பத்தினர் மறுத்தனர். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

பள்ளியில் கலவரம்
மாணவியின் இறப்பு நீதி கேட்டு குடும்பத்தினர் தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 17 ம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. போராடடக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து சூறையாடினர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீவைக்கப்பட்டது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் அதிகமான போலீசார் காயமடைந்தனர். போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சமூக வலைதளம் மூலம் ஆட்சேர்ப்பு
மாணவியின் மர்மமரணம் தொடர்பான விஷயத்தில் ஏராளமானவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஆட்களை சேர்த்து ஒரே நேரத்தில் திரண்டு கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக வாட்ஸ்அப்பில் குழு துவங்கி போராட்டத்துக்கான முன்னெடுப்புகளை சிலர் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் கலவரம் தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது தீவிர விசாரணை நடத்ப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம்
மேலும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 32 வகையான வதந்திகள் பரப்பப்பட்டதாக போலீசார் கூறும் நிலையில் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக டுவிட்டர் நிறுவனத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டுவிட்டரில் வதந்தி பரப்பியவர்களின் விவரங்களை வழங்கும்படி கூறப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனம் விவரங்கள் வழங்கும் பட்சத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் மர்மமரணம், கலவரம் தொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Recommended Video

11 நாளுக்கு பிறகு நல்லடக்கம்
முன்னதாக தமிழகம் முழுவதும் மாணவியின் மர்மமரணம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரதே பரிசோதனை முடிந்தாலும் மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது தந்தை சட்ட போராட்டத்தை முன்னெடுத்தார். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாணவியின் உடல் 2வது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் 11 நாளுக்கு பிறகு கடந்த 23ம் தேதி மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications