திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி.. கமல்ஹாசன் அறிவிப்பு
திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.
Recommended Video

திருச்சி: திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.
திருவெறும்பூர் ரவுண்டானா அருகே நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உஷா என்ற கர்ப்பிணி பெண் மரணம் அடைந்தார். போலீஸ் துரத்தி தாக்கியதில் இவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

இந்த விஷயம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு உஷாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் இழப்பீடு வழங்கி இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். ராயப்பேட்டை மக்கள் நீதி மய்ய மகளிர் தின விழாவில் கமல்ஹாசன் நிதியுதவி அறிவிப்பு. உஷாவின் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ''திருச்சியில் அநீதி நடந்து இருக்கிறது. நீதி காக்க வேண்டியவர்கள் நீதியை மோசமாக்கி இருக்கிறார்கள். போலீஸ் மட்டும் இதற்கு காரணமா? . அவர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications