வலை நிறைய வஞ்சிரம், பாறை மீன்கள்... கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் மகிழ்ச்சி
மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நிலையில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அதிக அளவு மீன்கள் கிடைத்த நிலையில் மகிழ்ச்சியோடு கரை திரும்பியுள்ளனர்.
கன்னியாகுமரி: மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள் அதிக அளவு மீன்களுடன், மகிழ்ச்சியோடு கரை திரும்பினர்.
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்களுக்கு அதிக அளவிலான விலை உயர்ந்த மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவடைந்தது.
இதையடுத்து, கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை முதல் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் 20 நாட்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆழ் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு வஞ்சிரம், பாறை, கனவாய், நவரை, திருக்கை உள்ளிட்ட விலையுயர்ந்த மீன்கள் அதிக அளவில் கிடைத்தன.
மேலும் சிறிய ரக மீன்களான மத்தி, வாளை, காரப்பொடி ஆகியவையும் அதிகளவில் கிடைத்தது. இரண்டு மாத காலமாக வெறிச்சோடிக் காணப்பட்ட சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் மீனவர்கள் மற்றும் வியபாரிகள் வருகையால் களை கட்டியுள்ளது.
அரபி கடல் பகுதிகளில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், கேரள வியாபாரிகள் அதிக விலை கொடுத்து, கன்னியாகுமரி மீன்களை வாங்கிச் சென்றதால், மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications