நலிந்தோருக்கு கருணாநிதி ரூ.3.25 லட்சம் நிதி உதவி
சென்னை: பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு மருத்துவ உதவிக்காகவும். காகவும், ஏழை மாணவர்கள் கல்விக்காகவும் திமுக தலைவர் கருணாநிதி தனது அறக்கட்டளை நிதியில் இருந்து 3.25 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டது. அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
10.1.2007-ல் புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கியது போக மீதியுள்ள ரூ.4 கோடியில் வரும் வட்டித் தொகையில் உதவி வழங்கப்படுகிறது.
2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.3 கோடியே 20 லட்சத்து 15 ஆயிரம். மேலும் 2014, மே மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 13 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3,25,000, இன்று (சனிக்கிழமை) வழங்கினார்.
நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.
நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ.3 கோடியே 20 லட்சத்து 15 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை தலைவர் கருணாநிதி வழங்கினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications