கதிராமங்கலம் மக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் எடப்பாடியின் 'அபாண்ட புளுகு'! #kathiramanglam
கதிராமங்கலம் மக்களை வன்முறையாளர்களாக சித்தரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அபாண்டமாக பொய் சொல்லியிருக்கிறார்.
சென்னை: கதிராமங்கலம் மக்கள் கல்வீசினார்களாம்; அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்தார்களாம்; அதனால் போலீசார் குறைவான தடியடி நடத்தினார்கள் என சட்டசபையில் கூசாமல் வன்முறையாளர்களாக முத்திரை குத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு விளைநிலங்கள் பாழகிக் கொண்டிருந்தன. பதைபதைத்துப் போன பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியரும் இதோ வருகிறேன்.. வருகிறேன் என கூறிக் கொண்டே காலம் தாழ்த்துகிறார். ஒருநாள் பகல் பொழுது முடிந்து போன நிலையில் மாலையில் காவல்துறை கண்காணிப்பாளர் கதிராமங்கலம் வருகிறார்.

தீ வைத்த போலீஸ்
மக்களோ ஆட்சியர்தான் என முண்டியடித்துக் கொண்டு வர போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டியது. எண்ணெய் குழாய் கசிவு இருந்த இடம் அருகே வைக்கோல்போருக்கு போலீசாரே தீவைத்தனர்.

கொடூரமாக தடியடி
தீ பற்றி எரிவதைக் கண்டு பதறிப் போய் நின்ற மக்களை குறிவைத்து ஈவிரக்கமே இல்லாமல் கொடூரமாகத் தாக்கியது போலீஸ். போராட வந்த பெண்களை போலீசின் குண்டாந்தடிகள் ஈவிரக்கமே இல்லாமல் தாக்கியது.

வழக்குகள் பாய்ந்தன
கதிராமங்கலத்தின் மனசாட்சி சொல்லும் இந்த நிஜத்தை. இப்போது கதிராமங்கலத்தில் அதிகாரிகளை செயல்படவிடாமல் தடுத்ததற்காக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்குகள் பாய்ந்துள்ளன.

வன்முறையாளர்களாக சித்தரிப்பு
அத்துடன் சட்டசபையில் கூசாமல் ஒரு முதல்வர், மக்கள் கல்வீசித் தாக்கினார்கள் என வன்முறையாளர்களாக முத்திரை குத்தியிருக்கிறது. எந்த ஒரு மாநில முதல்வரும் சொந்த மண்ணின் மக்களை வன்முறையாளர்கள் என முத்திரை குத்தியதாக இல்லை.
அதுசரி திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை அடிக்கவே இல்லை என்று பச்சை பொய் சொன்ன அரசுக்கு தலைமை வகிப்பவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
சாமளாபுரத்தில் போலீசாரே வாகன கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகள் வெளியான பின்னரும் பொய்யை மட்டும் பேசுவதாக உறுதியுடன் இருக்கும் அரசாங்கத்திடம் நீதியையும் நியாயத்தையுமா எதிர்பார்க்க முடியும்?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications