தமிழ்த் தாயைக் காணோம்.. மோனோ ரயிலைக் காணோம்.. பாலத்தையும் காணோம்.. கவலையில் மதுரை!
மதுரை: மதுரை மக்களுக்கு "அல்வா" கொடுத்து விட்டது தமிழக அரசு.. இப்படித்தான் மதுரையில் பேசிக் கொள்கிறார்கள். காரணம், மதுரையின் வளர்ச்சியையும், சுற்றுலா மேம்பாட்டையும் மனதில் கொண்டு அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டமும் தற்போது சாத்தயமில்லை என்று கூறி கைவிடப்பட்டு விட்டதாக பேச்சு அடிபடுகிறது.

அதிகாரிகள் மட்டத்திலேயே இவ்வாறு பேசப்படுவதால், மதுரை மக்கள் கடும் கோபத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர். மதுரை மக்கள் அதிகம் எதிர்பார்த்தது போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கக் கூடிய மோனோ ரயில் திட்டம் மற்றும் கோரிப்பாளையம் பாலம் திட்டம் ஆகியவற்றைத்தான். ஆனால் இரண்டையும் அரசு அதிகாரிகள் தூக்கி கிடப்பில் போட்டு விட்டதாக சொல்கிறார்கள்.
இரண்டையும் அமைப்பது சாத்தியமில்லாதது என்று ஆய்வுக்குப் பின்னர் அதிகாரிகள் கூறியுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் அரசும் அமைதியாக இருக்கிறதாம்.
இதை விட முக்கியமான ஏமாற்றமாக மதுரை மக்கள் கருதுவது தமிழ்த் தாய் சிலையைத்தான். குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குப் போட்டியாக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதுதான் ரூ. 120 கோடி மதிப்பிலான தமிழ்த் தாய் திட்டம்.
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை பாணியில் நீருக்கு நடுவே இந்த சிலையை நிறுவப் போவதாக அரசு அறிவித்தது. இதற்காக பல நீர் நிலைகளையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மதுரை வண்டியூர் தெப்பக்குளமும் கூட ஆய்வு செய்யப்பட்டது. கடைசியில் எதுவுமே சரியில்லை என்று அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி விட்டனராம்.
அதேபோல கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு பிரமாண்ட பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் பாதியிலேயே புட்டுக் கொண்டு விட்டது. என்ன ஆனது இந்தத் திட்டம் என்றே தெரியவில்லை என்கிறார்கள். இதே கதிதான் மோனோ ரயில் திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
மதுரையில் என்னப்பா நடக்குது??
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications