பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.. சென்னை போலீஸ்!
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video

சென்னை:காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கடந்த 13 ஆம் தேதி அதிகாலை ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க சென்றபோது பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெரியபாண்டியன் மரணம்
கொள்ளையர்கள் பெரியபாண்டியனை சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முனிசேகர்தான் சுட்டார்
அண்மையில் ராஜஸ்தான் எஸ்பி தீபக் பார்கவ் பெரியபாண்டியன் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கொள்ளையன் நாதுராமை நோக்கி கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

உறுதி செய்த சென்னை போலீஸ்
இந்நிலையில் ராஜஸ்தான் காவல்துறை கூறியதை சென்னை காவல்துறை உறுதி செய்ததாக இன்று மாலை தகவல் பரவியது. காப்பாற்ற சென்றபோது பெரியபாண்டியனை முனிசேகர் தவறுதலாக சுட்டார் என சென்னை போலீஸ் தெரிவித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

துறைரீதியில் நடவடிக்கை
கொள்ளையர்களை சுட முயன்றபோது தவறுதலாக முனிசேகரின் துப்பாக்கி குண்டு பெரியபாண்டியன் மீது பாய்ந்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக முனிசேகரிடம் ராஜஸ்தான் காவல்துறை விசாரணை முடிந்தபின் துறைரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சென்னை போலீஸ் தெரிவித்ததாக தகவல் பரவியது.

சென்னை போலீஸ் மறுப்பு
இந்நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. முனிசேகர் தவறுதலாக சுட்டார் என வெளியான தகவல்களுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர் என சென்னை போலீஸ் வெயிளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications