பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.. சென்னை போலீஸ்!
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video

சென்னை:காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கடந்த 13 ஆம் தேதி அதிகாலை ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க சென்றபோது பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெரியபாண்டியன் மரணம்
கொள்ளையர்கள் பெரியபாண்டியனை சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முனிசேகர்தான் சுட்டார்
அண்மையில் ராஜஸ்தான் எஸ்பி தீபக் பார்கவ் பெரியபாண்டியன் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கொள்ளையன் நாதுராமை நோக்கி கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

உறுதி செய்த சென்னை போலீஸ்
இந்நிலையில் ராஜஸ்தான் காவல்துறை கூறியதை சென்னை காவல்துறை உறுதி செய்ததாக இன்று மாலை தகவல் பரவியது. காப்பாற்ற சென்றபோது பெரியபாண்டியனை முனிசேகர் தவறுதலாக சுட்டார் என சென்னை போலீஸ் தெரிவித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

துறைரீதியில் நடவடிக்கை
கொள்ளையர்களை சுட முயன்றபோது தவறுதலாக முனிசேகரின் துப்பாக்கி குண்டு பெரியபாண்டியன் மீது பாய்ந்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக முனிசேகரிடம் ராஜஸ்தான் காவல்துறை விசாரணை முடிந்தபின் துறைரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சென்னை போலீஸ் தெரிவித்ததாக தகவல் பரவியது.

சென்னை போலீஸ் மறுப்பு
இந்நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. முனிசேகர் தவறுதலாக சுட்டார் என வெளியான தகவல்களுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர் என சென்னை போலீஸ் வெயிளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications