சங்கர் கொலை வழக்கில் சாதி சார்ந்த கருத்துகள் வேண்டாம்... கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் சாதி சார்ந்த கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
கோயம்புத்தூர் : உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் சாதி சார்ந்த கருத்துகளை யாரும் தெரிவிக்க வேண்டாம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. சாதியை காரணம் காட்டி பகைமை உணர்வை ஏற்படுத்துவது சரியல்ல என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் நடுரோட்டில் வைத்து கூலிப்படையினரால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நேற்று முன் தினம் திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த கொலை வழக்கு குறித்து பரவலாக பல தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சங்கர் கொலை வழக்கு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எந்த காரணத்திற்காகவும் உயிர் இழப்பை ஏற்படுத்துவது ஏற்க முடியாத ஒன்று. உடுமலைப்பேட்டை சங்கர் கொலையில் கொலைக்குற்றம் செய்தவர்களை மன்னிக்க முடியாது. தண்டனை கொடுத்துதான் தீர வேண்டும். ஆனால் சாதி வித்தியாச காரணங்களால் மட்டும் அது நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு தாய் தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாச போராட்டம் தான் அங்கு தலைதூக்கி நிற்கிறதே தவிர சாதி அல்ல. எதற்கு எடுத்தாலும் சாதியை காரணம் காட்டி சாதிகளுக்கு இடையிலான பகையை அதிகப்படுத்துவது ஏற்புடையதல்ல. இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் முன்னேற்றத்திற்காக ஊழலற்ற ஒரு ஆட்சியும், திறமைமிக்க நிர்வாகமும் தேவைப்படுகிறது.
மதம் சார்ந்த, சாதி சார்ந்த கருத்துக்களை தெரிவித்து மக்களை திசைதிருப்ப கூடாது. தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், தமிழகம் பட்டிருக்கின்ற கடனை அடைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், தமிழகம் பூராவும் தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று நினைப்பவர்கள் இன்றைய இலக்கு என்னவென்று புரிந்து கொண்டு ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குவதற்கு அர்பணித்துக் கொள்ள வேண்டும். அதை சாதிப்பதற்கு எத்தகைய போராட்டமாக இருந்தாலும் நடத்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications