ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்.. குமரெட்டியாபுரம் மக்கள் உறுதி!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று குமரெட்டியாபுரம் மக்கள் அறிவித்துள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வெளிவரும் வரை போராட்டம் தொடரும் என்று குமரெட்டியாபுரம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதுவரை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துவிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ. குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மற்றும் அண்டை கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டம் மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறி வருவதாக இந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றாததால் பராமரிப்பு பணி முடிந்து மீண்டும் ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கான உரிமம் நிராகரிக்கப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்படுமா என்று குமரெட்டியாபுரத்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும் மகேஷ் என்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது : மாசுகட்டுப்பாட்டு வாரியம் உரிமம் நிராகரித்ததால் ஸ்டெர்லைட் ஆலை தற்போது மட்டுமே திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்து விரைவில் அனுமதி பெறப்படும் என்று வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததாக சொல்வதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு அந்த ஆலை முற்றிலுமாக அந்த இடத்தில் இருந்து அகற்றப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications