சுதந்திர தினத்தன்று மேட்டூர் ரயிலை குண்டு வைத்து தகர்ப்போம்: ஐஎஸ்ஐஎஸ் பெயரில் எச்சரிக்கை
சேலம்: சுதந்திர தினத்தன்று மேட்டூர் சரக்கு ரயிலை குண்டு வைத்து தகர்க்க இருப்பதாக சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படைக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பெயரில் மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படைக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் அனுப்பியதாக மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில் வரும் சுதந்திர தினத்தன்று மேட்டூரில் இருந்து சேலம் வரும் சரக்கு ரயில் குண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் விடப்பட்டிருந்தது. மேலும் அக்கடிதத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாநிலச் செயலாளர் என்றும் போடப்பட்டிருந்தது.

மேலும், இந்தத் தாக்குதல் மேட்டூருக்கும், சேலம் ரயில் நிலையத்திற்கு இடையே நிகழ்த்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் கடிதத்தை சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இந்த மிரட்டல் கடிதம் கோவிலூர் கிராமத்தில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலூரில் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த 15 பேர் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மேட்டூர் அருகே உள்ள தங்கமாரிப்பட்டனத்தி்ல் இந்த ஐஎஸ் அமைப்பு செயல்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை உதவி கமிஷ்னர் கோவிந்தராஜ் கூறுகையில், ‘எங்களுக்கு இந்தக் கடிதம் கடந்த வெள்ளியன்று கிடைத்தது. கோவிலூர் கிராமத்தில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த மிரட்டல் கடிதத்தை நாங்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம்' என்றார்.
தொடர்ந்து இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications