போட்டிக்கு நாங்களும் சந்திப்போம்ல.. தேர்தல் ஆணையரிடம் அவசர அவசரமாக தேதி கேட்கும் தம்பிதுரை
சசிகலா ஆதரவு எம்பியான தம்பிதுரை நாளை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளார். ஓபிஎஸ் அணியினர் இன்று அவரை சந்தித்து சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில் இந்த அவசர
சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்திக்க லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நேரம் கேட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தனர்.
அப்போது, சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்பது குறித்து ஓபிஎஸ் அணியினர் விளக்கினார்கள். மேலும், இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வரும் 20ம் தேதி…
இதனையடுத்து, வரும் 20ம் தேதி சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆக, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிபோகுமா நீடிக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.

அவசர சந்திப்பு
இந்நிலையில், லோக் சபா துணை சபாநாயகரும் சசிகலா ஆதரவு எம்பியுமான தம்பிதுரை, அவசர அவசரமாக தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவருடன் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட சசிகலா ஆதரவு எம்பிகள் உடன் சென்று நஜீம் ஜைதியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

நேரம் ஒதுக்கவில்லை..
லோக் சபா எம்பி தம்பிதுரை, தேர்தல் ஆணையரை சந்திக்க நேரம் கேட்டிருந்தாலும், இன்னும் ஆணையத்திடம் இருந்து நேரம் ஒதுக்கி பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொடர் முயற்சியில் தம்பிதுரை ஈடுபட்டுள்ளார்.

இரட்டை இலை
எந்த வேட்பாளர் என்று பார்க்காமல் இரட்டை இலை சின்னத்தைப் பார்த்த உடன் ஓட்டு போடுபவர்கள் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள். இந்நிலையில், ஓபிஎஸ் அணியினர் மற்றும் சசிகலா அணியினர் இருவருக்குமே இரட்டை இலை சின்னம் அவசியமாக உள்ளது. எனவேதான் இரு தரப்புமே அடுத்தடுத்து தேர்தல் ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications