திருப்பரங்குன்றம் வங்கிக்கு விசிட் அடித்த ஸ்டாலின்.. கியூவில் நின்றவர்களிடம் குறை கேட்டார்
பழைய நோட்டுகளை மாற்ற வங்கியில் வரிசையில் நிற்கும் மக்களிடம் மு.க. ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
மதுரை: பழைய நோட்டுகளை மாற்ற வங்கியின் வாசலில் காத்திருக்கும் மக்களிடம் குறைகளை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர், வங்கி அதிகாரிகளிடம் விரைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ஒரு வாரமாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளின் வாசலில் பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர். 10ம் தேதியில் ஆரம்பித்த இந்தப் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு ஏற்படாத நிலை உள்ளது. கூடுதல் பிரச்சனையாக இன்றிலிருந்து பணம் மாற்றுவோரின் விரல்களில் அழியாத மை வைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் சிரமத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்ற மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். திருப்பரங்குன்றம் அருகே உள்ளது நல்லூர். அங்குள்ள ஒரு வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். அப்போது அங்கு சென்ற மு.க. ஸ்டாலின், காத்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் ஏற்படும் சிரமங்களை ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.
பின்னர், வங்கிக்குள் சென்ற மு.க. ஸ்டாலின் வங்கி அதிகாரிகளிடம் பேசினார். அப்போது, மக்களின் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யுமாறும் சிரமம் இல்லாமல் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் அவர் வங்கி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் தமிழக மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். கடந்த ஒரு வாரமாக ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்களின் நேரத்தை வங்கி ஏடிஎம் மையங்களின் முன்பு கால் கடுக்க நின்று செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மதுரையை அடுத்த நல்லூரில் உள்ள வங்கிக்கு நேரில் சென்று அங்கு வரிசையில் நின்ற மக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மத்திய அரசின் முடிவு அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. மக்களுக்கு வங்கிகளில் போதிய பணம் கிடைப்பதற்கு மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக, திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தில் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications