திராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்... ஸ்டாலின் விளக்கம்!
திமுக திராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பது போன்று பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக அந்த கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : திராவிட நாடு உருவாக வேண்டும் என்று தான் குரல் கொடுக்கவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டுத் திடலை பார்வையிட்ட பின்னர் அந்த கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தென்மாநிலத்தில் திராவிடநாடு கோரிக்கை வலுப்பெற்று வரும் சூழல் நிலவுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின் வந்தால் வரவேற்பேன், வரும் என்ற நம்பிக்கையில் தான் நானும் இருக்கிறேன் என்றார்.

தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் மு.க.ஸ்டாலின் திராவிட நாடு வந்தால் வரவேற்பேன் என்று கூறியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவால் கைவிடப்பட்ட திராவிட நாடு கோரிக்கை மீண்டும் உயிர்பெற்று வருகிறதோ என்று அரசியல் நோக்கர்கள் கருதினர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திராவிட நாடு கொள்கையை பொறுத்தவரை அண்ணா அன்றே அதனை கைவிட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் திமுக திராவிட நாடு கேட்டது போலவும் அதற்கு குரல் கொடுப்பது போலவும், ஆதரவு தெரிவிப்பது போலவும் மிகப்பெரிய பிரச்சாரத்தை தொடங்கி நடத்திக்கொண்டு வருகிறார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications