தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது... சட்டசபையை உடனே கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்!
தமிழக அரசு கோமா நிலையில் உள்ளதாகவும் சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்றும் எதிர்க்ட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : அதிமுகவினர் மாறி மாறி சண்டை போட்டுக்கொள்வதை நிறுத்திவிட்டு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2017 -18ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டம் முழுவதும் முடியாமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலிடம் இன்று மனு அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
மானிய கோரிக்கையில் விடுபட்ட துறைகள் குறித்து விவாதிக்க உடனடியாக சட்டசபையைக் கூட்ட வேண்டும். இதற்கு முதலமைச்சரின் அனுமதியை கேட்டு பதில் அளிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
முதலமைச்சரையும் நேரில் சந்தித்து மனு அளிக்க காத்திருந்தோம். ஆனால் அரை மணி நேரம் காத்திருந்தும் அவரை சந்திக்க முடியவில்லை, இந்த நிலையில் தான் தமிழக அரசு இன்று உள்ளது.
இதுவரை ஒரு அணியாக இருந்து கொள்ளையடித்தோர் இன்று ஃபெரா கும்பல், மாஃபியா கும்பல் என தனித்தனியாக பிரிந்து கொள்ளையடிக்கின்றனர். மக்கள் பிரச்னைகள் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. தமிழக அரசு தற்போது கோமா நிலையில் உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications