குப்பைமேட்டில் 24 மணி நேரம் இருக்க முடியுமா.. மாநகராட்சி ஆணையருக்கு ஹைகோர்ட் நீதிபதிகள் அதிரடி!
சென்னை: சென்னை கொடுங்கையூரில் விதிமுறைகளை மீறி குப்பை கொட்டும் சென்னை மாநகராட்சியின் செயலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த குப்பைக் கிடங்கில் குடிசை போட்டுத் தருகிறோம், சென்னை மாநகராட்சி கமிஷனரால் அங்கு 24 மணி நேரம் வசிக்க முடியுமா என்றும் நீதிபதிகள் ஆவேசமாக கேட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் எழில் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் உட்பட பலர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அதில், 1970-ம் ஆண்டு முதல் எழில் நகரில் குடிசை போட்டு வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் நிலத்துக்கு சென்னை மாவட்ட கலெக்டர் பட்டாவும் வழங்கியுள்ளார். எங்கள் குடியிருப்புக்கு அருகே மாநகராட்சி குப்பை கொட்டும் இடம் உள்ளது.

இந்த நிலையில், எங்கள் சங்க உறுப்பினர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். மேலும், எங்கள் நிலத்துக்கு அருகே குப்பைகளை கொட்டுகின்றனர். அந்த குப்பைகளை எரிக்கவும் செய்கின்றனர். இதனால், குடியிருப்பு பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. எனவே, எங்கள் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டவும், எங்கள் இடத்தில் குப்பை கொட்டவும் சென்னை மாநகராட்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்களும் ஆஜராகி வாதிட்டார்கள். அப்போது நீதிபதிகள் கோபமாக பேசினர். அவர்கள் கூறுகையில், குப்பை கொட்டும் பகுதிக்கு அருகே வசிக்கும் மக்கள் படும் அவதிகள் இந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவில்லை. அதனால், அந்த மக்களின் கஷ்டங்களை தெரிந்து கொள்ள, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு, குப்பை கொட்டும் இடத்துக்கு அருகே ஒரு குடிசை போட்டுக் கொடுத்து, அதில் அவரை குடியிருக்க சொல்ல வேண்டும். அல்லது ஒரு நாற்காலியை கொடுத்து உட்கார வைக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு மக்களின் கஷ்டங்கள் தெரியும். அவரால் 24 மணி நேரம் அந்த இடத்தில் இருக்க முடியுமா? மாநகராட்சி ஆணையர் விரும்பினால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு வீடு கூட கட்டித் தருகிறோம் என்று கோபமாக தெரிவித்தனர்.
இதன் பின்னர் நீதிபதிகள் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர். அதில், இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகளில், எதையெல்லாம் அமல்படுத்தப்பட்டுள்ளது? எவையெல்லாம் அமல்படுத்தவில்லை? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் விரிவான பட்டியல் ஒன்றை சென்னை மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications