தமிழக டிஜிபிக்கு எதிரான வாக்கி டாக்கி புகார் மனு ஹைகோர்ட் தள்ளுபடி
வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு செய்ததாக டிஜிபிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை: தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கிய விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் புதிய ஆளுநர் புரோஹித்தை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக டி.ஜி.பிமீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வேல்முருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது என்றும், அதனால் அந்த நிறுவனத்திற்கு 83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017-18 ஆம் ஆண்டில் 47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டு 10 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட வேண்டும் என்றும், ஆனால் 83.45 கோடி செலவு செய்து வெறும் 4000 வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் செந்தில் தெரிவித்துள்ளார்.
48 ஆயிரம் மதிப்புள்ள ஒரு வாக்கி-டாக்கியை 2 லட்சம் ரூபாய் கொடுத்து காவல்துறை வாங்கி மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் செந்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பத்திரிகை செய்தி அடிப்படையில் மனு தாக்கல் செய்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என்பதில் பொதுமக்களுக்கு அக்கறை உள்ளது என்று கூறிய நீதிபதிகள், இந்த மனுவில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதே போல உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் டிஜிபிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications