அனிதாவின் இறப்பை தடுத்திருக்கலாம்... சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஆதங்கம்!
நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றியிருந்தால் மாணவி அனிதாவின் இறப்பை தடுத்திருக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றியிருந்தால் மாணவி அனிதாவின் இறப்பை தடுத்திருக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்து ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். மாநில வழி பாடதிட்டத்தில் படித்து பிளஸ்2 தேர்வில் 1,148 மதிப்பெண் எடுத்துள்ள தான் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று ஆவலுடன், நீட் தேர்வு எழுதியுள்ளேன். ஆனால், தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 23ல் விசாரணைக்கு வந்த போது நீதிபதி கிருபாகரன் நீட் விவகாரத்தில் மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் விளைவித்துள்ளது என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் உறுதியான முடிவை விரைந்து எடுக்காமல், தமிழக அரசு இழுத்தடித்ததாகவும் அவர் கூறிஇருந்தார்.
மேலும் மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் எத்தனை பேருக்கு நீட் தேர்வு அடிப்படையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது ஹைகோர்ட் ஆணையை செயல்படுத்தியிருந்தார் அனிதாவின் மரணத்தை தடுத்திருக்கலாம் என்று நீதிபதி கருத்து கூறியுள்ளார். மேலும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள், பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications