2.44% ஊதிய உயர்வு தர தயார்... தொழிற்சங்கத்தினரிடம் அரசு உறுதி!
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 சதவிகிதம் ஊதிய உயர்வு தரத் தயார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொழிற்சங்கத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.
சென்னை : போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 சதவிகிதம் ஊதிய உயர்வு தரத் தயார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொழிற்சங்கத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் கோரிய 2.57 % ஊதிய உயர்வுக்குப் பதில் 2.40% ஊதிய உயர்வு தர அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு 2.44 சதவிகிதத்துடன் கூடுதல் தொகையாக 0.3% வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதயளித்துள்ளார்.

3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யவும் அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசின் இந்த உறுதிகுறித்து தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
2.57 சதவீத ஊதியம் உயர்வு தர அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் சுமார் 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் திடீரென பேருந்துகளை நடுவழியில் நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அரசுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே நாளை பேருந்துகள் இயக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications